New

Showing posts with label CPM. Show all posts
Showing posts with label CPM. Show all posts

உயிர்ப்பின் அனுபவம்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே !
இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நம்முடைய “உயிர்ப்பு வாழ்வுக்கு” முன் அடையாளமாகவும், நமக்கு நம்பிக்கை “ஏற்படுத்துவதாகவும் அமைகிறது”. இயேசு கிறிஸ்து மிகுந்த பாடுகளையும், கஷ்டங்களையும், வேதனைகளையும் ஏற்றுக்கொண்டு, அதையே உயிர்ப்புக்கு விலையாகக் கொடுத்தார் - 1கொரி 7:23. பாடுகளும், துன்பங்களும், கஷ்டங்களும் பயனுள்ளது. அதற்குரிய பயனும் மிக உயர்ந்ததே. “இறந்த பின்பு வாழ்வு” என்பதே அவற்றின் பயன். “பாடுகளுக்குப் பின்பு மகிமை” என்பது நமக்கு நிச்சயம் உண்டு. 



இயேசுவுடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும், அப்போது அவருடைய மகிமையில் நமக்கு பங்கு கிடைக்கும் - உரோ 8:17. நாம் நம்முடைய அன்றாடப் பாடுகளை ஏற்றுக்கொள்ளும் போது, இயேசு அவருடைய மகிமையில் நமக்கு பங்கு தருகின்றார். நாம் நம்முடைய அன்றாடப் பாடுகளை, விரும்பி ஏற்றுக்கொண்டால், நாம், இயேசுவுடைய உயிர்ப்பின் அனுபவத்தில் வாழ்ந்து, அனேகரை பாவத்திலிருந்து விடுவித்து, உயிர்த்த மக்களாக உருவாக்க முடியும், என்பதை இந்த செய்தியில் பார்ப்போம்.



பாடுகளுக்கு எல்லை உண்டு


இயேசுவுடைய மரணத்தின் சாயலோடு நம்மை பொருத்தி இணைத்தால், அவருடைய உயிர்ப்பின் சாயலோடு பொருத்தி இணைக்கப்படுவோம் என்று, உரோ 6:5-ல் பவுல் கூறுகின்றார். பக்தியோடு கிறிஸ்து இயேசுவுக்குள் வாழ்கின்றவர்கள் அனைவரும் துன்புறுத்தப்படுகின்றனர் - 2திமொ 3:12. ஆனால் பாடுகளும், துன்பங்களும், வேதனைகளும் என்றென்றும் நம்மோடு நிலைத்திருப்பதில்லை. அதற்கு ஒரு எல்லை உண்டு. “இந்த உலகத்தில் உங்களுக்கு துன்பம் உண்டு. ஆயினும் அஞ்சாதீர்கள். நான் உலகத்தை ஜெயித்தேன்” - யோவா 16:33. இது நமக்கு உயிர்ப்பு நாளின் நிகழ்ச்சியை தெளிவுபடுத்துகின்றது. உயிர்ப்பின் நாளில் நாம் சந்தோஷம் அடைய வேண்டும். நம்முடைய வாழ்க்கையிலும் பாடுகளுக்குப் பின் மகிமை உண்டு, என்பதை உணர்ந்து மனநிறைவு அடைய வேண்டும்.



பாடுகள் உயிர்ப்பின் அனுபவம்


பாவத்திற்கு அடிமைப்பட்ட நிலையில், பாவம் கெம்பீரத்தோடு ஆட்சி செய்து கொண்டிருக்கிற இந்த உலகத்தில், பரிசுத்தமாக வாழ்கின்றவர்களுக்கு பாடுகள் உண்டு - தி.தூ 9:16. இந்த உலகத்தோடு நமக்குள்ள உறவுகளை முறித்து விட்டு, தேவனோடும், பரலோகத்தோடும் உள்ள உறவை உருவாக்கி வாழ ஆரம்பிக்கும் போது, பாடுகள் வருகின்றன. பாடுகளுக்குள் இருக்கும்போது ஒரு விசுவாசி மகிமையின் வாழ்க்கையை கண்டு கொள்வார். ஒரு விசுவாசியால் மட்டுமே, உயிர்ப்பின் மகிமையை அனுபவிக்க முடிகிறது - யோபு 1:21. உலகத்தில் வாழ்கின்றவர்களுக்கு உயிர்ப்பின் மகிமையை அனுபவிக்க முடியாது - யோபு 2:9.

உயிர்த்த மனிதர், ஒரு புதிய வட்டத்திற்குள் தம்மை கையளிக்கின்றார். உயிர்த்தவர்கள் ஒரு வட்டத்திற்குள் வாழ வேண்டும் என வேதம் கற்று தருகின்றது - 2திமொ 2:22,23. இந்த வட்டம் என்று சொல்வது, நம் சுய விருப்பம், கடவுளுடைய விருப்பத்துக்கு கட்டுபட்டு வாழும் வாழ்க்கை - லூக் 18:11. நம் பழைய வாழ்க்கையிலிருந்து திரும்பி, கர்த்தருக்குள் நம்மை அடக்கம் செய்யும்போது, உயிர்ப்பின் வாழ்க்கை ஆரம்பிக்கின்றது - லூக் 1:38. உயிர்ப்பின் வாழ்க்கைக்குள் மூன்று விதமான நிலைகள் காணப்படுகின்றன.


1.போராட்டத்தின் நிலை

முதல் நிலையில் மாமிசத்தோடு (சரீரத்தோடு) போராட்டம் ஏற்படுகின்றது. அபிஷேகம் பெற்ற பின்பும், உயிர்த்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும்போது, பாவக்கறை நம்மை அழுத்துவதால், மனம் போராடி கொண்டிருக்கிறது. ஏற்கனவே எடுத்துக் கொண்ட முடிவுகளில் நிலைத்திருக்க முடியாமல், சலனமும், சஞ்சலமும் ஏற்பட செய்து, பாவகட்டுகள் பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது - உரோ 7 : 24,25. இவ்வாறு பாவகட்டுகளை கண்டு பயப்படுகிறவர்களுக்கு இரண்டாம் நிலை உதவி செய்கின்றது.


2. பாடுகளை ஏற்கும் நிலை:

நாம் நம்முடைய வாழ்க்கையில் அன்றாடம் வருகின்ற பாடுகளை மகிழ்வோடு ஏற்றுகொள்ளும்போது, நமக்குள் இருக்கின்ற மாமிசக் கட்டுகள், சரீர - சுபாவ குழப்பங்கள், கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து செத்துப் போகும். விசுவாசிகள் பாடுகளை ஏற்றுக்கொண்டு, இந்த நிலையில் கடந்து சென்றால், உயிர்த்த வாழ்வு வாழ்கின்றார்கள் - 2கொரி 4:11. நம்மை தீய சக்திகள் மேற்கொள்ளாமல், ஜெயம் பெறுவோம்.


3. உயிர்ப்பின் நிலை:

பாடுகளை ஏற்றுக் கொள்ளும்போது நாம் உயிர்ப்பின் நிலையை அனுபவிக்கிறோம். உயிர்ப்பு என்பது ஒரு அனுபவம். மனதிற்குள், உணர்வுப்பூர்வமாய் எடுத்து கொள்கின்ற முடிவிற்குள் இந்த அனுபவம் நமக்கு கிடைக்கிறது. எந்த துன்பத்திலும், கஷ்டத்திலும், வேதனையிலும் நன்றி! ஸ்தோத்திரம்! ஆமென்! சொல்லும்போது “உயிர்ப்பை” நாம் அனுபவித்து கொண்டிருக்கிறோம் - 1தெச 5:18.



மேலுலகில் உள்ளவற்றை நாட வேண்டும்
ஏசா தன்னுடைய சுய சுதந்திரத்தை, உலக ஆசீர்வாதங்களுக்காகவும், உலக இன்பங்களுக்காகவும் யாக்கோபினிடத்தில் கையளித்தான். பாவத்திற்கு அடிமையானான் - எபி 12:16.

இந்த உலகத்திற்கு அடுத்தவற்றில் மனதை செலுத்தாமல், மேலுலகில் உள்ளவற்றை நாடுங்கள் - கொலோ 3:1. மேலுலகத்திற்கு உரியவை எல்லாம், வேதத்தில் இருக்கின்றன. கடவுளையும், அவருக்கு விருப்பமானவற்றையும் நாடுங்கள் - மத் 6:33. மனிதர்கள் தங்களை கடவுளிடத்தில் முற்றிலும், கையளிக்கும்போது, தங்களை பரிசுத்தப்படுத்துகிறார்கள். அதோடு கடவுளுடைய ஒழுக்க நெறிகளையும், திருச்சட்டத்தையும் கடைபிடித்து வாழ்கிறார்கள். மனதை கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு, கடவுளின் விருப்பப்படி வாழும்போது உயிர்த்த வாழ்க்கை வாழ்கிறோம்.



உலகிற்கடுத்தவை சாகடிக்கப்பட வேண்டும்
உலகிற்கடுத்தவையான பரத்தமை, ஒழுக்ககேடு, பேராசை ஆகியவை சாகடிக்கப்பட வேண்டும் - கொலோ 3:5. இப்போது நாம் பாவம் செய்யாமல் இருக்கலாம். நம்முடைய பழைய பாவங்கள் பாவக்கறையாக நம் ஆத்மாவில் படிந்து இருக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்த பாடுகளை ஏற்றுக் கொள்வோம். தேவன் விரும்புவதை செய்யும்போது நாம் பரிசுத்தமடைகிறோம். அன்றாட பாடுகளை ஏற்று கொள்வதால், பாவக்கறைகள் போக்கப்படுகின்றன - மத் 16:24, எபி 9:22. துன்ப வேளையில் ஆவியின் கனிகளில் நிலைத்திருப்பதாலும், ஆத்தும பாரத்தோடு பிறருடைய மீட்புக்காக பரிந்து பேசி ஜெபிப்பதாலும், நம்மில் உலகிற்கடுத்தவை சாகடிக்கப்படுகின்றன.

ஒரு விளையாட்டு மைதானத்தில் விளையாடுகின்ற ஒரு மனிதருக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் வட்டம் போட்டு கொடுக்கின்றார்கள். அதற்கு வெளியே சென்றால் அவுட் என்று கூறி வெளியே தள்ளுகின்றார்கள். மாறாக, அதன் விதிகளுக்கு உட்பட்டு விளையாடும்போது, வெற்றி கிடைக்கின்றது - 1கொரி 9:24,25. உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று முற்றிலும் மாற்றம் அடைவதாக - உரோ 12:2. உயிர்ப்பின் வாழ்க்கை நம்மில் செயலாற்ற பாவ அழுக்குகளை துடைப்போம். மறு உலகையும், இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுதலையும் அடைவதற்கு தகுதி உள்ளவராக எண்ணப்படுவோர் பெண் கொள்வதும் இல்லை. கொடுப்பதும் இல்லை. இனிமேல் அவர்கள் இறக்கமாட்டார்கள். வானதூதருக்கு ஒப்பாக இருப்பார்கள். உயிர்த்த மக்களாக வாழ்கின்றனர் - மத் 22:30. அவர்கள் தங்களுடைய சுய சுதந்திரத்தை இயேசு கிறிஸ்துவினிடத்தில் கையளித்து தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழ்கின்றனர்.

ஞானஸ்நானத்தின் வழியாக நீங்கள் அவரோடு புதைக்கப்பட்டிருக்கிறீர்கள். இறந்தோரிடமிருந்து அவரை உயிர்த்தெழ செய்த, கடவுளின் ஆற்றல் மீது கொண்ட விசுவாசத்தால், அவரோடு நீங்களும் உயிர்த்தெழுந்தீர்கள் - உரோ 6:3. பாடுகளில் இயேசுவோடு நிலைத்திருந்தால், உயிர்த்த வாழ்வில் அவரோடு நிலைத்திருப்போம்.



பழைய வாழ்வை முழுமையாக விட்டுவிடுதல்
ஆண்டவரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவை அறிய செய்யும் அறிவினால், உலக தீட்டிலிருந்து தப்பியபின், இவர்கள் மீண்டும் அதில் சிக்கி அதனால் வெல்லப்பட்டால், இவர்களுடைய பின்னைய நிலை, முன்னைய நிலையிலும் மோசமானதாகும் - 2பேது 2:20. உலகத் தீட்டிலிருந்து தப்பிய நாம், மீண்டும்; பேயின் விருப்பத்திற்கு அடிமைப்பட்டால் முந்திய நிலையை விட பிந்திய நிலை மோசமானதாகும். தான் கக்கியதை தின்ன நாய் திரும்பி வரும் என்னும் பழமொழி உண்மையாகிறது. கழுவிய பின் பன்றி மீண்டும் சேற்றிலே புரளும் என்றும் கூறப்படுகிறது. - 2பேது 2:22. உயிர்த்த வாழ்வுக்கென்று தங்களை கையளித்தவர்கள், மீண்டும் பழைய வாழ்வுக்கு தங்களை உட்படுத்தி கொள்வதால் ஏற்படும் தீமையை குறித்து, இவ்வாறு வேதம் எச்சரிக்கின்றது.



மூன்று இளைஞர்களின் உயிர்ப்பின் அனுபவம்
நெபுகத்னேசர் அரசன் அறுபது முழ உயரமும், ஆறுமுழ அகலமும் உள்ள பொற்சிலை ஒன்றை செய்து, பாபிலோன் நாட்டிலுள்ள தூரா என்ற சமவெளியில் நிறுத்தி வைத்தான் தானி 3:1. எல்லா நாட்டினருக்கும், மொழியினருக்கும் அறிக்கை ஒன்று வெளியிட்டான். பலவிதமான இசைக்கருவிகள் ஒலிக்க தொடங்கும் நேரத்தில், எல்லோரும் நெபுகத்னேசர் அரசன் நிறுவிய பொற்சிலையை கீழே வீழ்ந்து பணிந்து தொழ வேண்டும். எவராகிலும் கீழே வீழ்ந்து பணிந்து தொழவில்லையெனில், அந்நேரமே எரிகிற தீச்சூளையில் போடப்படுவார்கள் என்று கூறியிருந்தான் - தானி 3:6.

சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ என்ற மூன்று இளைஞர்கள் மட்டும் நெபுகத்னேசர் நாட்டிய பொற்சிலையை பணிந்து தொழவில்லை. இதை அரசனுக்கு தெரியப்படுத்தினார்கள். அரசன் மூன்று இளைஞர்களிடமும் ஏன் பொற்சிலையை பணிந்து தொழவில்லை என கோபத்தோடு கேட்டான். அந்த மூன்று இளைஞர்களும் ஜீவனுள்ள தேவனை, தங்கள் சொந்த இரட்சகராக ஏற்று, வழிபட்டு வந்தனர். அவர்கள் அரசனிடம், “அரசே நாங்கள் வழிபடுகின்ற எங்கள் கடவுள் எரிகிற தீச்சூளையினின்றும், உம் கைகளினின்றும் எங்களை காப்பாற்றி மீட்க வல்லவர். அப்படியே அவருக்கு மனமில்லாமல் போனாலும் உம்முடைய தெய்வங்களை வழிபடமாட்டோம். நீர் நாட்டிய பொற்சிலையை தொழமாட்டோம்” என்றார்கள் - தானி 3:18.




என்ன துணிச்சல் பாருங்கள்! அந்த மூன்று இளைஞர்களும் உயிர்ப்பின் அனுபவத்திற்குள் தினமும் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள். அன்றாடப் பாடுகளை நன்றி! ஸ்தோத்திரம்! ஆமென்! சொல்லி சந்தோஷமாக ஏற்றுக் கொண்டவர்கள். எனவே தான், மரணமே ஏற்பட்டாலும் பயப்படாமல் துணிந்து பாடுகளை விரும்பி ஏற்றார்கள். பாடுகளை தங்களுடைய பாவக்கறையைப் போக்க, பரிகாரமாய் எடுத்துக்கொண்டார்கள். துன்பங்கள், பாடுகள், வேதனைகளில் கடவுளுடைய விருப்பப்படி வாழ்ந்து, கடவுளுடைய ஒழுக்க நெறிகளையும் சட்டங்களையும் கடைபிடித்தார்கள். 

இவ்வாறு பாடுகளை ஏற்றுக்கொண்டபோது, மேலும் பரிசுத்தமடைந்தார்கள். சாதாரணமாக சூடாக்குவதை விட ஏழுமடங்கு தீச்சூளையை அதிகமாக சூடாக்கியபோதும், நெருப்பு அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. அரசன் வியப்புற்று விரைந்தெழுந்து தம் அமைச்சரை நோக்கி, மூன்று பேரைத்தான் நெருப்பினுள் கட்டி எறிந்தோம். இப்பொழுது கட்டவிழ்க்கப்பட்டவர்களாய் நெருப்பின் நடுவில் நான்குபேர் உலவுவதை காண்கிறேன் என்றான் - தானி 3:25.

நெபுகத்னேசர் எரிகிற தீச்சூளையின் வாயிலருகில் வந்து, “உன்னத கடவுளின் ஊழியர்களே! வெளியே வாருங்கள்” என்றான். மூன்று இளைஞர்களும் தீயினின்று வெளியே வந்தனர். சிற்றரசர்களும் அதிகாரிகளும், ஆளுநரும், அந்த மூன்று இளைஞர்கள் தீயில் போடப்படுவதற்கு முன் எப்படி இருந்தார்களோ அதே போல் தோற்றமளித்ததை கண்டு ஆச்சரியமடைந்தனர் - தானி 3:27. அரசனும், அந்நாட்டு மக்கள் அனைவரும் உயிர்ப்பின் கடவுளை ஏற்றுக் கொண்டார்கள். பொற்சிலையை வணங்குவதை விட்டுவிட்டு ஜீவனுள்ள தேவனை வழிபடத் தொடங்கினர். 



மதலேன் மரியாள் பெற்ற உயிர்ப்பின் அனுபவம்


மதலேன் மரியாள் பாவகட்டுகளுக்குள் வாழ்ந்து கொண்டிருந்தாள். அவள் பாவி என எல்லோரும் அறிந்திருந்தார்கள். அவள் இயேசு கிறிஸ்துவினிடத்தில் வந்தபோது, ஒரு புதிய வாழ்க்கைக்கு தன்னை ஆயத்தப்படுத்தினாள். தன்னுடைய சுய சுதந்திரத்தை, உலக ஆசைகளிலிருந்தும், உலக இன்பங்களிலிருந்தும் விடுவித்து இயேசுவுக்கு தன்னை முழுமையாக கையளித்தாள்.

மேலும், இயேசு கிறிஸ்துவை சந்தித்த நாளிலிருந்து, இயேசு காட்டிய வாழ்வின் பாதையில், ஒரு கட்டுபாட்டுக்குள் தன்னை வைத்துக் கொண்டாள். “இனி மேல்பாவம் செய்யாதே” என இயேசு எப்போது கட்டளையிட்டாரோ அந்த நேரத்திலிருந்தே, தன் முழு மன சுதந்திரத்தையும், இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்படிய தன்னை கையளித்தாள் - யோவா 8:1.

மதலேன் மரியாள் புறப்பட்ட பாதையிலிருந்து திரும்பாமல், புறப்பட்ட பாதையிலேயே தொடர்ந்து சென்று கொண்டிருந்தாள். இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்று அவர் விருப்பப்படி வாழ்ந்தாள். லூக் 8-ம் அதிகாரத்தில் இயேசு சென்ற இடமெல்லாம், அப்போஸ்தலர்களும், சீடர்களும் சென்ற இடமெல்லாம், மதலேன் மரியாளும் சென்று கொண்டிருந்தாள்.

ஆனால், மதலேன் மரியாள் இயேசுவை பற்றிக் கொண்டிருந்த விதத்தில் வித்தியாசம் இருந்தது. அவர் எதை விரும்புகின்றாரோ அதை செய்து, அவர் எதை வெறுக்கின்றாரோ அதை வெறுத்து, இயேசுவின் மனதிற்கு உகந்தபடி வாழ்ந்தாள் - தி.பா 37:31. 




மேலும், இயேசு கிறிஸ்துவிடமிருந்து பேதுருவும், யோவானும் மற்ற அப்போஸ்தலர்களும் பெற்ற அனுபவத்தைவிட, மதலேன் மரியாள் பெற்று கொண்ட அனுபவம் வித்தியாசமானது – யோவா 20:2 - கல்லறைத் தோட்டத்தில் ஒரு புதிய அனுபவத்தை மதலேன் மரியாள் பெற்றாள். கல்லறைத் தோட்டம், மதலேன் மரியாள் வழியாக ஒரு புதிய அனுபவத்தை கொண்டு வந்தது. உலகிற்கு உயிர்ப்பின் செய்தியை அறிவித்த முதல் விசுவாசி மதலேன் மரியாள் - யோவா 20:18.

உங்களுக்காக என் உயிரையே கொடுப்பேன் என்று சொன்ன சீடர்கள் அவரை விட்டு விட்டு சென்று விட்டார்கள். அனேக அற்புதங்களும், அருங்குறிகளும் செய்து அவருக்கு பின்னால் சென்றவர்களால் உயிர்ப்பின் அனுபவத்தை பெற முடியவில்லை. ஆனால், மதலேன் மரியாள் தன்னை முழுமையாக கடவுளிடம் கையளித்து, உலகில் உள்ள எதையும் எதிர்பார்க்காமல் இயேசு கிறிஸ்துவின் பாடுகளிலும், மரணத்திலும் தொடர்ந்து பங்கு கொண்டாள் - யோவா 20:1.

கல்லறை தோட்டத்தில் அவளுடைய உள்ளம் இயேசு கிறிஸ்துவை தேடிக்கொண்டே இருந்தது. இயேசுவை ஏக்கத்தோடு தேடி, அவள் ஓர் உயிர்ப்பின் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாள் - யோவா 20:15. அதனால் உண்மை உயிர்ப்பை அவளால் அனுபவிக்க முடிந்தது. உலக வாழ்க்கையை பொறுத்தவரையில் அத்தனைபேரும் அவளை கல்லெறிந்து கொல்வதற்கு நினைத்தார்கள். அவள் ஏற்கனவே செத்து போனவள் - யோவா 8:5. இயேசுவின் சடலத்தைக் கூட, தனக்குச் சொந்தமாக்க, அவள் ஆசித்தாள். அவள் ஒரு இயேசு பைத்தியமாக இருந்தாள்.

இயேசு தோட்டக்காரனாக நின்று கொண்டிருந்தார். அவளுடைய பெயரை உச்சரித்து அழைத்தபோது, இயேசுவை அவள் கண்டு கொண்டாள் – யோவா 20:16. இயேசுவினுடைய பாடுகளில் பங்கு பெற்றதால் மதலேன் மரியாள் இயேசுவின் உயிர்ப்பிலும் பங்கு பெற்றாள். பாடுகளில், எதற்கும் பயப்படாமல் அஞ்சா நெஞ்சத்தோடு துணிந்து இயேசுவை தேடியதால் உயிர்த்த இயேசுவை கண்டு கொண்டாள் - ஆமோஸ் 5:6. இதனால், மதலேன் மரியாள் ஒரு புதிய சகாப்தத்தையே உருவாக்கி விட்டாள். அவளுக்கு பின்னால், ஒரு கூட்டம் மக்கள் உயிர்த்த இயேசுவைப் பெற்று, உயிர்ப்பு அனுபவத்தில் வாழ்ந்தார்கள்.



கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே !
நாம் நம்முடைய அன்றாட பாடுகளை ஏற்றுக்கொண்டு வாழும்போது, நமக்குள் இருக்கின்ற மாமிச கட்டுகள், சரீர சுபாவ குழப்பங்களை தேவன் பெலன் குன்ற செய்து, உயிர்ப்பு வாழ்க்கையில் வழிநடத்துவார். உலக கட்டிலிருந்து தப்பிய நாம், மீண்டும் பேயின் வலையில் சிக்குண்டு, அதற்கு அடிமைபட்டால், முந்திய நிலையை விட பிந்திய நிலை ஆபத்தானது.

எனவே, நம்முடைய சுய சுதந்திரத்தை இயேசு கிறிஸ்துவின் காலடியில் ஒப்புகொடுத்து, அன்றாட பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய உள்ளும் புறமும் எல்லா கட்டுகளையும், எதிர்த்து போராட ஆயத்தமாகும் போது, தேவன் ஓர் உயிர்த்த வாழ்வை நமக்குத் தருவார். மதலேன் மரியாள் உலகத்திற்கு ஒரு புதிய ஆத்மீகத்தைத் தந்தாள். மதலேன் மரியாளிடம் இருந்த ஆத்மீகம் நமக்கும் தேவைப்படுகிறது. ஒரு விசுவாச கூட்டத்தை உருவாக்கி, விசுவாச கூட்டத்திற்குள் வாழ்வோம். மதலேன் மரியாளை பெயர் சொல்லி அழைத்து திடப்படுத்திய தேவன், நம்மிடமும், அஞ்சாதே, கலங்காதே, நான் உன்னோடிருந்து, கரம் பிடித்து நடத்துவேன் என உறுதிபடுத்துவார். உலகம் முடிந்த பிறகு, அல்லது நாம் இறந்த பிறகு, உயிர்ப்பு வாழ்க்கை கிடைக்கும் என்றல்லாமல், இந்த பூமியில் இருக்கும்போதே! உயிர்த்தவர்களாய் வாழ்வோம். ஆமென்!

நன்றி http://www.catholicpentecostmission.org/Uyirpin_anubavam.html
Share:

அவசர கால வாக்குத்தத்தம்

 உங்களது  வாழ்கையில் ஏற்படும் பலவீனங்கள் தடுமாற்றங்கள் கவலைகளில் தேவனிடம் இருந்து ஒரு வாக்குத்தத்தம் பெற உள்ளது அவசர கால வாக்குத்தத்தம் எனது வாழ்கையில் சோர்வு ஏற்பட்ட போது இந்த தளத்தில் ஒரு சிறு ஜெபத்தோடு எண்களில் ஒன்றை அழுத்தி ஒரு வாக்குத்தத்தம் பெறுவேன் அது அன்றைய நாளிற்கு மிகுந்த ஆசிர்வாதமாக   இருக்கும்  இங்கே http://www.catholicpentecostmission.org/promise%20home%20page.html
Share:

இறை அரசின் நற்குடும்பம்



I. சில வேத பகுதிகள் :
  • குடும்பம் திருமண நிறைவை பெறும் இடம் - இ.ச. 24:5.
  • இறைவனின் இரக்கச் செயல்களைப் பறைசாற்றும் இடம் குடும்பம் - மாற் 5:19.
  • பிள்ளைகள் ஒழுக்க நெறியில் வளர்க்கப்பட வேண்டிய இடம் குடும்பம் - லேவி 19:29.
  • பெற்றோர், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என எல்லாருமே பேணப்பட வேண்டிய இடம் குடும்பம் - 1திமொ 5:4.
  • மனைவியர், தாய்க்குரிய கடமைகளைச் செய்து, இல்லற மகிமையை வளர்க்கும் இடம் குடும்பம் - தீத் 2:4-5.
  • கணவனின் உழைப்பு, குடும்பத்தை பேண – தொ.நூ 30:30.
  • கணவன் எங்கே உழைக்கச் சென்றாலும், பாசத்தோடு திரும்பிச் செல்லும் இடம் குடும்பம் - தொ.நூ 31:30.
  • கணவன் எங்கிருந்தாலும், நாடும் வீடும் அவன் நினைவில் நிறைந்திருக்கும் - எண் 10:30.
  • மூதாதையர் வாழ்ந்து மடிந்த குடும்பத்தோடு தானும் இருந்து வாழ்வை முடிக்க விரும்புவது குடும்ப பற்று – 2சாமு 19:37.
  • எந்த காலத்திலும், தாம் பிறந்து வளர்ந்த இடத்தையும், குடும்பத்தையும் எண்ணி ஏக்கம் கொள்வது குடும்ப உறவு – தி.பா 137:1-6.
  • கணவன் மனைவியிடையே அன்புறவும் பாசப்பிணைப்பும் கூடும் போது, அவர்களை பிரியவிடாமல் கட்டி வைப்பது குடும்பம் - தொ.நூ 19:11-20, நீதி.த 14:1-10.

II. A. குடும்பம் திருமணத்தால் ஆரம்பமாகிறது :

1. மண ஒப்பந்தம் :
  • யாக்கோபு – ராகேல் - தொ.நூ 29:18-20.
  • தாவீது – மேராபு – 1சாமு 18:17.
  • யோசேப்பு – மரியாள் - லூக் 1:26-27.
  • மண ஒப்பந்தமானவனுக்கு சலுகை - இ.ச. 20:7.
2. திருமணம் :
  • திருமணம் செய்து, குடும்பத்தை நல்ல முறையில் நடத்த வேண்டும் - 1திமொ 5:14.
  • மணவறைப்படுக்கை மாசுறாமலிருக்க, திருமணத்தை உயர்வாக கருதுங்கள் - எபி 13:4.
3. திருமணக் கடமைகள் :
  • கணவன் தன் மனைவியோடு கூடியிருப்பான் - தொ.நூ 2:24.
  • மனைவியை விலக்கி விடாதே – மத் 5:32.
  • கடவுள் இணைத்ததை, மனிதன் பிரிக்காதிருக்கட்டும் - மாற் 10:8-9.
  • மனைவியும், கணவனைப் பிரிந்து வாழக் கூடாது – 1கொரி 7:10,11.
4. கடவுளோடு ஒப்பிடும் திருமண வாழ்வு :
  • உன்னைப் படைத்தவரே உன் கணவர் - எசா 54:5.
  • இளைஞன் கன்னிப்பெண்ணை மணப்பது போல், கடவுள் உன்னை மணந்து மகிழ்விப்பார் - எசா 62:5.
  • முடிவில்லா காலத்துக்கு, உன்னோடு மண ஒப்பந்தம் செய்து கொள்வேன் - ஒசே 2:19,20.
  • இறை அரசை, திருமண விருந்தோடு ஒப்பிடலாம் - மத் 22:2.
  • மணமகன் இயேசுவோடு, ஆயத்தமானவர் நுழைவர் - மத் 25:10.
  • ஆட்டுக்குட்டியின் மண விழாவுக்கு, மணவாட்டி ஆயத்தமாயிருக்கிறார் - வெளி 19:7.

B. குடும்ப அன்பு :

1. திருமண அன்பு :
  • ஈசாக்கு, ரபேக்கா மீது அன்பு வைத்து, தாயின் கூடாரத்தில், தன் குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்தார் - தொ.நூ 24:67.
  • யாக்கோபு, ராகேல் மேல் கொண்ட அன்பால், ஏழு ஆண்டுகள், அவருக்கு சில நாட்களாகவே பட்டது – தொ.நூ 29:20.
  • பெண்கள் அனைவரிலும், எஸ்தரையே மன்னர் விரும்பினார் - எஸ்தர் 2:17.
  • உன் மனைவியின் அன்பு, உன்னை எந்நாளும் ஆட்கொண்டிருப்பதாக – நீ.மொ 5:19.
  • கணவர், தன் மனைவியை, தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செய்ய வேண்டும் - எபே 5:28.
  • கணவர், தங்கள் மனைவியரை கொடுமைப்படுத்தாமல் அன்பு செய்யுங்கள் - கொலோ 3:19.

2. பெற்றோர் அன்பு :
  • என் புதல்வியரையும், பேரப்பிள்ளைகளையும் முத்தமிட, நீ ஏன் என்னை அனுமதிக்கவில்லை? – லாபான் - தொ.நூ 31:28.
  • யோசேப்புக்காக, தகப்பன் யாக்கோபு துக்கம் கொண்டாடினார் - தொ.நூ 37:34,35.
  • யாக்கோபு, தன் இளைய மகனுக்காக பரிந்து பேசுகிறார் - தொ.நூ 42:38.
  • யோசேப்பை கண்ட யாக்கோபு, பெருமகிழ்ச்சி கொண்டார் - தொ.நூ 46:30.
  • தாவீது, தன் மகனுக்காக நோன்பிருந்து மன்றாடினார் - 2சாமு 12:16.
  • தாவீது, தன் மகன் அப்சலோமை காண ஏங்கினார் - 2சாமு 13:39.
  • அப்சலேமுக்கு தீங்கிழைக்காதபடி, தாவீது கேட்டுக்கொண்டார் - 2சாமு 18:5.
  • யாயீர், தன் மகளுக்காக, இயேசுவிடம் பரிந்து பேசுகிறார் - மாற் 5:23.
  • ஊதாரி மகனின் தந்தை, மகனை கட்டியணைத்து முத்தமிட்டார் - லூக் 15:20.
3. கணவன் மனைவி :

(i) கணவனின் கடமை :
  • மனைவியை எலும்பின் எலும்பும், சதையின் சதையுமாக கணவன் நடத்த வேண்டும் - தொ.நூ 2:23.
  • தன் தாய் தந்தையை விட்டு, தன் மனைவியோடு கணவன் இருப்பார் - தொ.நூ 2:24.
  • திருமணமானதும், வீட்டில் இருந்து ஓர் ஆண்டுகாலம் கணவன் மனைவியை மகிழ்விக்க வேண்டும் - இ.ச. 24:5.
  • இளமையில் மணந்த மனைவியோடு மகிழ்ந்திரு – நீ.மொ 5:18.
  • உலக வாழ்வு வீண் என்றாலும், உனக்கு கிடைத்த அன்பு மனைவியோடு இன்புற்றிரு – ச.உ 9:9.
  • கிறிஸ்து திருச்சபையை அன்பு செய்வது போல, கணவன் மனைவியை அன்பு செய்ய வேண்டும் - எபே 5:25.
(ii) மனைவியின் கடமை
  • மனைவியர் கணவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் - எஸ்தர் 1:20.
  • சோம்பேறியாக அல்லாமல், இல்லத்தின் அலுவல்களில் கருத்தாயிருப்பாள் - நீ.மொ 31:27.
  • மனைவி கணவனிடமிருந்து பிரிந்து வாழலாகாது – 1கொரி 7:10.
  • மனைவியர், தன் கணவருக்கு பணிந்திருக்க வேண்டும் - கொலோ 3:18.
  • நம்பத்தக்கவராயும், புறங்கூறாதவராயும், சுறுசுறுப்பு உடையவராயும் மனைவியர் இருக்க வேண்டும் - 1திமொ 3:11.
  • மனைவியர் கணவனுடன் பிள்ளைகளிடமும் அன்பு காட்ட வேண்டும் - தீத் 2:4,5.
  • தூய நடத்தையால், கெட்ட கணவரை நல்வழிப்படுத்த வேண்டும் - 1பேது 3:1.
4. நல்ல ஆலோசனை :
  • சூனாமித்தாள், தன் கணவனிடம் நல்ல ஆலோசனை கூறினாள் - 2அர 4:8-10.
  • மனோவாகு தன் மனைவிக்கு நல்லாலோசனை கூறினாள் - நீதி.த 13:22.
  • பெல்சாட்சர் மன்னனுக்கு மனைவி நல்ல அறிவுரை கூறினாள் - தானி 5:10-12.
  • பிலாத்துவின் மனைவி, பிலாத்துவுக்கு நல்ல அறிவுரை கூறினாள் - மத் 27:19.

C. பெற்றோரின் கடமைகள் :

1. கற்பிக்க :
  • இறை வார்த்தையை உன் பிள்ளைகளுக்கு பேசு - இ.ச. 6:7.
  • திருச்சட்டங்களை பிள்ளைகளுக்கு விளக்கு - இ.ச. 6:20,21.
  • பிடிவாதமுள்ள பிள்ளைகளை பெரியோர்களிடம், பெற்றோர் கூட்டி வந்து திருத்துவர் - இ.ச. 21:19.
2. நற்பயிற்சியளிக்க :
  • நல் வழியில் நடக்க பிள்ளைகளை பழக்கு – நீ.மொ 22:6.
  • தந்தையர், பிள்ளைகளுக்கு இறை பயிற்சி தருவர் - எசா 38:19.
  • பெற்றோர் பிள்ளைகளுக்காக ஜெபிக்க வேண்டும் - புல 2:19.
  • பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாமல் அவர்களை கண்டித்து திருத்தி வளர்க்க வேண்டும் - எபே 6:4.
  • பிள்ளைகள் பணிவுடனும், மிகுந்த கண்ணியத்துடனும் வளர எல்லாம் செய்ய வேண்டும் - 1திமொ 3:4, 3:12.
3. திருத்தம் தர :
  • கண்டித்து திருத்துக – நீ.மொ 13:24.
  • திருத்தும் பருவத்தில் தண்டித்து திருத்து – நீ.மொ 19:18.
  • திருத்துவதால், தீமையை பிள்ளையிடமிருந்து நீக்குவாய் - நீ.மொ 22:15.
  • தண்டித்து திருத்துவதால், பாதாளத்துக்கு தப்புவிப்பாய் - நீ.மொ 23:13.
4. புத்தி சொல்லல் :
  • ஆண்டவரைப் பற்றி, பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் எடுத்து கூறு - இ.ச. 4:9.
  • ஆண்டவரைப்பற்றி, எல்லா வேளைகளிலும் பேசுங்கள் - இ.ச. 11:19.
  • அறியாத பிள்ளைகளுக்கு, ஆண்டவரை பற்றி கூறுங்கள் - இ.ச. 31:13.
  • பால் குடி மறக்கும் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்கு புத்தி புகட்டும் - எசா 28:9.

D. பெற்றோரின் "மாதிரி" :

1. தீய முன் மாதிரி :
  • அகசியா, தந்தை ஆகாபின் வழியில் தீமை செய்தான் - 1அர 22:52.
  • தாயின் கொடுமதியால் அகசியா தீய வழி நடந்தான் - 2குறி 22:3.
  • மூதாதையர் கற்றுத்தந்தபடி பாகாலை பின்பற்றினர் - எரே 9:14.
  • தந்தையர், பின்பற்றிய பொய் தெய்வங்களை பிள்ளைகளும் பின்பற்றினார் - ஆமோ 2:4.
  • அவள் தாய் சொல்லிக் கொடுத்தப்படி, யோவானின் தலையை மகள் கேட்டாள் - மத் 14:8.
2. நல்ல முன் மாதிரி :
  • உன் தந்தை தாவீதைப் போல் நீதியோடு நட – 1அர 9:4.
  • யோசேபாத் - தன் மூதாதை தாவீதின் வழியில் நடந்தார் - 2குறி 17:3.
  • தந்தையின் வழிகளை விட்டு விடாது. ஆண்டவரின் பார்வையில் நேரியதைச் செய்தார் - 2குறி 20:32.
  • தந்தை அமட்சியாவைப் போல், உசியா நடந்தான் - 2குறி 26:4.
3. பெற்றோரின் தவறுகள் :
  • பிள்ளைகள் தவறு செய்த போது, தடுக்காத குற்றத்துக்கு குரு ஏலிக்கு தண்டனை – 1சாமு 3:13.
  • சாமுவேலின் பிள்ளைகள், பொருளாசைக்கு உட்பட்டு கையூட்டு வாங்கினர் - 1சாமு 8:3.
  • ஏன் இப்படி செய்கிறாய் என்று, தாவீது தன் பிள்ளை அந்தோணியாவை கண்டிக்கவில்லை – 1அர 1:6.
  • தன் விருப்பம் போல் விடப்பட்ட பிள்ளைகள், பெற்றோருக்கு வெட்கத்தை வருவிப்பார் - நீ.மொ 29:15.
4. பெற்றோர் ஒரு சார்பு நிலை :
  • ஈசாக்கு ஏசா மேலும், யாக்கோபு மேல் ரபேக்காளும் அன்பு கொண்டிருந்தனர் - தொ.நூ 25:28.
  • யாக்கோபு, யோசேப்பை, மற்றெல்லா பிள்ளைகளை விட அதிகம் அன்பு செய்தார் - தொ.நூ 37:31.
  • யோசேப்புக்கு அதிக சொத்தை யாக்கோபு கொடுத்தார் - தொ.நூ 48:22.
  • வேலைக்காரிகளின் பிள்ளைகள் இறந்தாலும் பரவாயில்லை எனறு, யாக்கோபு அவர்களை முதல் வரிசையில் நிறுத்தினார் - தொ.நூ 33:2.
5. பெற்றோரின் பாவம், பிள்ளைகளை தொடரும் :
  • பெற்றோரின் பாவங்களுக்காக தலைமுறை தோறும், கடவுள் தண்டனை வழங்குவார் - வி.ப. 20:5, 34:7.
  • மூதாதையர் செய்த குற்றங்களுக்காக பிள்ளைகளுக்கு தண்டனை உண்டு – லேவி 26:39.
  • ஆண்டவர், மூதாதையர் குற்றங்களுக்காக, பிள்ளைகளை தண்டிப்பார் - எண் 14:18.
  • 40 ஆண்டுகள், உங்கள் பிள்ளைகள், உங்கள் பொருட்டு துன்புறுவர் - எண் 14:33.
  • மூதாதையர் பொருட்டு பிள்ளைகளுக்கு போர்க்களம் - எசா 14:21.
  • தந்தையரின் குற்றங்களுக்கான தண்டனை பிள்ளைகளுக்கு – எரே 32:28,29.

E. பெற்றோரின் உணர்வுகள் :

1. பெற்றோரின் அன்பு :
  • ஆபிரகாம், தன் மகனுக்கு தனக்குரிய அனைத்தையும் கொடுத்தார் - தொ.நூ 24:36.
  • யாக்கோபு, தன் மகன் யோசேப்புக்கு, அழகு வேலைப்பாடு மிகுந்த ஓர் அங்கியை செய்து கொடுத்தார் - தொ.நூ 37:3.
  • காலேபு, தன் மகளுக்கு நீரூற்று உள்ள நிலத்தைக் கொடுத்தார் - யோசு 15:19.
  • சாமுவேலின் தாய் அவனுக்கு ஆண்டுதோறும் ஒரு சிற்றாடை செய்து கொடுப்பார் - 1 சாமு 2:19.
  • பிள்ளைகளுக்கு பெற்றோர் நன்கொடைகள் அளிப்பார் - மத் 7:11.
2. பெற்றோரின் மகிழ்ச்சி :
  • ஞானமுள்ள மகன், தந்தையை மகிழ்விப்பான் - நீ.மொ 15:20.
  • நேர்மையுள்ள பிள்ளையால், பெற்றோர் களிகூர்வர் - நீ.மொ 23:24.
  • மகனே, நீ ஞானமுள்ளவனாகி என்னை மகிழச்செய் - நீ.மொ 27:11.
  • ஞானத்தை விரும்புவோர், தந்தையை மகிழ்விப்பார் - நீ.மொ 23:3.
  • திரும்பி வந்த மகனுக்காக, தந்தைக்கு மகிழ்ச்சி – லூக் 15:23.
3. பெற்றோரின் கவலை :
  • அப்சலோமுக்காக தாவீது கதறல் - 2சாமு 18:33.
  • அறிவற்ற மக்களால், தாய்க்கு துயர் - நீ.மொ 10:1.
  • மதிகேடரை பெற்றவர், கவலைக்குள்ளாவார் - நீ.மொ 17:21.
  • மதிகெட்ட மகனால் தாய்க்கு துயரம் - நீ.மொ 17:25.
  • மதிகெட்ட மகனால் தந்தைக்கு கேடு – நீ.மொ 19:13.
  • பெற்றோரை கொடுமைப்படுத்தும் மகன், அவர்களுக்குத் துயரம் தருவான் - நீ.மொ 19:26.
  • ஊதாரிகளோடு சேர்ந்த மகன், தந்தைக்கு கவலை தருவான் - நீ.மொ 28:7.
  • விருப்பம் போல் விடப்பட்ட பிள்ளையால், பெற்றோருக்கு கவலை – நீ.மொ 29:5.
4. பெற்றோரின் அக்கரை :
  • சகோதரரை விசாரித்து வர, யோசேப்பை யாக்கோபு அனுப்பினார் - தொ.நூ 37:14.
  • சவுலைக் காணாததால், பெற்றோர் பாரப்பட்டனர் - 1சாமு 10:21.
  • தாவீது அரசன், அப்சலோமின் நலம்பற்றி அக்கரை கொண்டு விசாரித்தார் - 2சாமு 18:29.
  • மொர்தொக்காய் ஒவ்வொரு நாளும், எஸ்தரின் நலம்பற்றி விசாரித்து அறிந்து வந்தார் - எஸ்தர் 2:11.

F. பிள்ளைகள் :

1. கடவுளின் கொடை :
  • யாக்கோபு, தன் பிள்ளைகள் கடவுள் கருணையுடன் அருளிய கொடை என்று, ஏசாவுக்கு சொன்னார் - தொ.நூ 33:5.
  • கடவுள் தந்த மைந்தர்கள் இவர்கள் என்று யோசேப்பு, தன் பிள்ளைகளை யாக்கோபுக்கு காட்டினார் - தொ.நூ 48:9.
  • ஆபிரகாமுக்கு நான் ஈசாக்கை அளித்தேன் என்று, கடவுள் கூறினார் - யோசு 24:3.
  • மலடிக்கு கடவுள் தாய்மைப்பேறு அருள்கிறார் - தி.பா 113:9.
  • பிள்ளைகள், ஆண்டவர் அருளும் செல்வம் - தி.பா 127:3.
  • ஆண்டவர் எனக்கு அருளிய குழந்தைகள் – எசா 8:18.
2. உயர்வாக கருதப்பட்டனர் :
  • பிள்ளைகள், வீரரின் கையிலுள்ள அன்புக்கு ஒப்பானவர் - தி.பா 127:4,5.
  • பிள்ளைகள், ஒலிவ கன்றுகள் போல் சூழ்ந்திருப்பர் - தி.பா 128:3.
  • முதியோருக்கு பேரப்பிள்ளைகள் மணிமுடி போன்றவர் - நீ.மொ 17:6.
  • விண்ணரசு சிறுபிள்ளைகளுக்குரியது – மத் 19:4.
3. பிள்ளைகள் தாய் தந்தையை போற்ற பிறந்தவர் :
  • தாய் தந்தையை போற்று, நீடிய வாழ்வடைவாய் - வி.ப. 20:12.
  • தாய் தந்தைக்கு அஞ்சுங்கள் - லேவி 19:3.
  • தாய் தந்தையை பழிக்கிறவர் சபிக்கப்படுக - இ.ச. 27:16.
  • பெற்றோரின் நற்பயிற்சியை தள்ளிவிடாதே – நீ.மொ 1:8.
  • பெற்றோரை சபிக்கிறவனின் விளக்கு, இருளில் அணையும் - நீ.மொ 20:20.
  • பெற்றோரை பழிக்கிறவர்களின் கண்களை கழுகு தின்னும் - நீ.மொ 30:17.
  • பெற்றோரை சபிப்போர் கொல்லபட வேண்டும் - மத் 15:4.
  • பெற்றோரை மதிப்பதே, வாக்குறுதியை உள்ளடக்கிய கட்டளை – எபே 6:2.
4. நல்ல பிள்ளைகளுக்கு உதாரணம் :
  • யோசேப்பு – தன் குடும்பத்தாரை பேணிக்காத்தார் - தொ.நூ 47:12.
  • தாவீது – மோவாபு மன்னனிடம் பெற்றோரை ஒப்படைத்தார் - 1சாமு 22:3-4.
  • சாலமோன் - சாலமோனின் அரியணைக்கு அருகே, தாய்க்கும் இருக்கை போடப்பட்டது – 1அர 2:19.
  • எலிசா – நல்ல தந்தையிடம், விடைபெற அனுமதி கேட்டார் - 1அர 19:20.
  • யோனதாபின் பிள்ளைகள் - பெற்றோருக்கு பணிந்து நல்லொழுக்கத்தை கடைபிடித்தனர் - எரே 35:8.
  • இயேசு – பெற்றோருக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தார் - லூக் 2:51.
5. பிள்ளைகளுக்குரிய கீழ்ப்படிதல் :
  • பிள்ளாய், பெற்றோரின் கட்டளையை கடைபிடி – நீ.மொ 6.20.
  • என் பிள்ளையே! என் கட்டளைகளை, செல்வம் என போற்று – நீ.மொ 7:1.
  • பிள்ளைகள் பெற்றோருக்கு பணிந்திருங்கள் - எபே 6:1, கொலோ 3:20.
6. குடும்ப ஜெபத்தில் :
  • குடும்பமாக யூதா குலத்தவர் ஆண்டவர் திருமுன் நின்றனர் - 2குறி 20:13.
  • எஸ்றா நடத்திய ஜெப ஆராதனையில், மக்கள் குடும்பமாக பங்கேற்றனர் - எஸ்ரா 8:21.
  • அன்று இஸ்ராயேலர் குடும்பமாக கூடி ஜெபித்தனர் - நெகே 12:43.
  • இயேசுவுக்கு ஓசான்னா பாடும்போது, சிறு பிள்ளைகளும் சேர்ந்து கொண்டனர் - மத் 21:5.
7. கெட்ட பிள்ளைகள் :
  • பெற்றோரை அடிக்கிறவர், கொல்லப்பட வேண்டும் - வி.ப. 21:15.
  • பெற்றோரை சபிக்கிறவர் கொலை செய்யப்பட வேண்டும் - லேவி 20:9.
  • பிடிவாதமுள்ள பிள்ளையை தலைவர்களிடம் ஒப்படை - இ.ச. 21:18.
  • தங்கள் பிள்ளை, பெருந்தீனிக்காரன், முரட்டுத்தனம் உள்ளவன், சொல் கேட்பதில்லை. குடிவெறியன் என அவர்களிடம் கூறவும் - இ.ச. 21:20.
  • தீய பிள்ளையை, மக்கள் கல்லெறிந்து கொல்லட்டும் - இ.ச. 21:21.
  • பெற்றோரின் பொருளை திருடுகிறவன், கொள்ளைக்காரன் - நீ.மொ 28:24.
  • தாயை வாழ்த்தாதவர், கெட்ட பிள்ளைகள் - நீ.மொ 30:11.
8. உதவும் பிள்ளைகள் :
  • சாமுவேல் என்னும் சிறுவன் ஆண்டவர் முன் ஊழியம் செய்தான் - 1சாமு 2:18.
  • தாவீதுக்கு உதவ, யோனத்தானுக்கு சிறுவன் உதவி சிறுவன் உதவி செய்தான் - 1சாமு 20:36.
  • நாமானின் நோய்தீர, யூத சிறுமி உதவினாள் - 2அர 5:2,3.
  • யோவாசு என்னும் 7 வயது சிறுவன், நாற்பது ஆண்டுகள் யூதாவை ஆண்டார் - 2குறி 24:1.
  • தந்தையின் அலுவலில் ஈடுபட்டார் சிறுவன் இயேசு – லூக் 2:49.
  • இயேசுவின் ஊழியத்துக்கு உதவிய சிறுவன் - யோவா 6:9.
9. கேலி செய்யும் சுட்டி பிள்ளைகள் :
  • எலிசாவை கேலி செய்த சிறுவர் - 2அர 2:23.
  • சிறுவர்களும் என்னை ஏளனம் செய்கின்றனர் - யோபு 19:18.
  • சிறுவர் முதியோரை அவமதிப்பார் - எசா 3:5.
10. பிள்ளைகளுக்கான வாக்குத்தத்தம் :
  • நீடிய நாட்கள் நலமுடன் வாழ்வாய் - இ.ச. 5:16.
  • ஆண்டவர் என்னை ஏற்றுக்கொள்வார் - தி.பா 27:10.
  • நற்பேறு பெறுவீர்கள் - நீ.மொ 8:32.
  • ஆட்டுக்குட்டிகளை அவர் தூக்கி சுமப்பார் - எசா 40:11.
  • சிறு பிள்ளைகளுக்கு இறையரசு உரியது – மாற் 10:14.
  • வாக்குறுதிகள் உங்கள் பிள்ளைகளுக்கும் உரியது – தி.தூ 2:39.
  • நலம் பெறுவாய், மண்ணுலகில் நீடுழி வாழ்வாய் - எபே 6:2.
11. பெற்றோருக்கு பிரியாமான பிள்ளைகள் :
  • தந்தை ஆபிரகாமின் விசுவாசத்துக்காக, சாகத்துணிந்த மகன் ஈசாக்கு – தொ.நூ 22:7.
  • தந்தையின் பொருத்தனைக்காக, சாகத்துணிந்த இப்தாவின் புதல்வி – நீதி.த 11:36.
  • ஆலயத்தில் வளர்ந்த சிறுவன் சாமுவேல் அனைவருக்கும் பிரியமுள்ளவனாயிருந்தான் - 1சாமு 2:26.
  • சிறுவன் யோவான் தெய்வ பிள்ளையாக வளர்ந்தார் - லூக் 1:80.
  • வெளிவேடமற்ற நம்பிக்கையுடைய சிறுவன் திமோத்தேயு இருந்தார் - 2திமொ 1:5.
  • திருச்சட்ட நூலை, குழந்தையிலேயே கற்றார் திமோத்தேயு – 2திமொ 3:15.
12. பிள்ளைகளுக்கு பெயரிடல் :
  • ஆதாம் தம் மகனுக்கு சேத் என்று பெயரிட்டான் - தொ.நூ 4:25.
  • இலாமேக்கு தன் மகனுக்கு நோவா என்று பெயரிட்டான் - தொ.நூ 5:29.
  • ஆபிரகாம் தன் மகனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டார் - தொ.நூ 21:3.
  • ராகேல் தம் மகனுக்கு நப்தலி என்று பெயரிட்டார் - தொ.நூ 30:8.
  • யோசேப்பு, தலைமகனுக்கு மனாசே என்று பெயரிட்டார் - தொ.நூ 41:51.
  • பார்வோனின் மகள் அவனுக்கு மோசே என்று பெயரிட்டார் - வி.ப. 2:10.
13. பிள்ளைகளை தத்தெடுத்தல் :
  • ஆபிரகாம், தனக்கு பிள்ளையில்லாததால், தன் வேலைக்காரனை தத்தெடுப்பதாக கடவுளிடம் கூறினார் - தொ.நூ 15:3.
  • யோசேப்பின் இரு புதல்வர்களையும், யாக்கோபு தத்தெடுத்தார் - தொ.நூ 48:5.
  • மோசேயை பார்வோனின் மகள் தத்தெடுத்தார் - வி.ப. 2:10.
  • மார்தொக்காய், தன் சகோதரனின் மகள் எஸ்தரை தத்தெடுத்தார் - எஸ்தர் 2:7.
14. பிள்ளைகளை முன்னறிவிப்பு :
  • இஸ்மாயேலின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது – தொ.நூ 16:11.
  • ஈசாக்கின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது – தொ.நூ 18:10.
  • சிம்சோனின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது – நீதி.த 13:13.
  • சூனாமித்தாளுக்கு பிள்ளை பிறப்பதாக முன்னறிவிக்கப்பட்டது – 2அர 4:16.
  • யோசிபா அரசனின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது – 1அர 13:2.
  • எம்மானுவேலின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது - எசா 9:6.
  • இயேசுவின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது – மத் 1:21.
  • யோவானின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது – லூக் 1:13.
15. பிள்ளைகளின் பிறப்புரிமை (தலைமகன் உரிமை)
  • ஏசாவின் தலைமகனுரிமையை அவன் விற்றான் - தொ.நூ 25:33.
  • யாக்கோபின் மகன் ரூபன், தலைமகன் உரிமை பெற்றான் - தொ.நூ 43:33.
  • தலைச்சன் உரிமையை, உரியவருக்கு தரவேண்டும் - இ.ச 21:16.
  • யோசபாத்து, யோராமுக்கு தலைமகனுக்குரிய அரசை அளித்தார் - 2குறி 21:3.

G. குடும்ப பிரச்சனைகள் :
  • சாராளை, பணிப்பெண் ஆகார் தான் கருவுற்றிருப்பதை அறிந்து இழிவாக பேசினாள் - தொ.நூ 16:5.
  • ஈசாக்கு, ரபேக்காளும், மருமக்களால் மனக்கசப்பு அடைந்தார் - தொ.நூ 26:34,35, 27:46.
  • தந்தையிடமிருந்து, யாக்கோபு பெற்ற ஆசியை முன்னிட்டு, ஏசா அவன் மீது வர்மம் கொண்டான் - தொ.நூ 27:41.
  • யோசேப்பை, யாக்கோபு அதிகம் நேசிக்கிறார் என்று கண்டு சாராதவர், அவரை வெறுத்தனர் - தொ.நூ 37:4.
  • மோசே, எத்தியோப்பிய பெண்ணை மணந்ததால், ஆரோனும் மிரியாமும் அவருக்கெதிராக பேசினர் - எண் 12:1.
  • தாவீது, பேழைக்கு முன்பு குதித்து ஆடியதால், மனைவி மீக்கால் அவரை தன் உள்ளத்தில் வெறுத்தாள் - 2சாமு 6:16.
  • உன் குடும்பத்திலிருந்தே தீங்கை வருவிப்பேன் - 2சாமு 12:11.
  • வஸ்தி கீழ்படியாததால், அகஸ்வேர் மன்னன், அவளை வெறுத்து ஒதுக்கினான் - எஸ்தர் 1:12.

H. குடும்பத்துக்கு பகைவன் :
1. விபச்சாரம் :
  • விபச்சாரம் செய்யாதே – வி.ப. 20:14, மத் 5:27,28.
  • அடுத்தவன் மனைவியோடு உடலுறவு கொண்டால், இருவரும் கொலை செய்யப்பட வேண்டும் - லேவி 20:10.
  • காமுகனின் கண், கருக்கலுக்காய் காத்திருக்கும் - யோபு 24:15.
  • பரத்தமையில் ஈடுபட்டால், மனைவியை விலக்கு – மத் 19:9.
  • கணவன் இருக்கும் போது, பெண் வேறொருவரோடு வாழ்ந்தால், அவள் விபச்சாரி – உரோ 7:3.
  • பரத்தமையில் ஈடுபடுவோருக்கு, இறை அரசு இல்லை – 1கொரி 6:9.
  • கற்பு நெறி இழந்த பெண்களை சுற்றியே வருவர், சாபத்துக்குள்ளானவர் - 2பேது 2:14.
2. பலதாரம் :
  • இலாமேக்கு, இரண்டு பெண்களை மணந்து கொண்டார் - தொ.நூ 4:19.
  • ஆபிரகாம், ஆகாரை மனைவியாக்கினார் - தொ.நூ 16:3.
  • ஏசா நாற்பது வயதில் யூதித்தையும், பாசமத்தையும் மணந்தார் - தொ.நூ 26:34.
  • யாக்கோபு, லேயாள், ராகேல் என்று இருவரை மணந்தார் - தொ.நூ 29:28.
  • கிதியோனுக்கு பல மனைவியர் இருந்தனர் - நீதி.த 8:30.
  • எல்கானாவுக்கு அன்னா, பெனனா என்ற இரு மனைவியர் இருந்தனர் - 1சாமு 1:2.
  • சாலமோனுக்கு பல மனைவியர் இருந்தனர் - 1அர 11:1-3.
3. பலதாரத்துக்கு தடை :
  • மனம் ஆண்டவரை விட்டு அகலாதிருக்க, பல மனைவியர் ஆகாது - இ.ச. 17:17.
  • இளமையில் மணந்த மனைவிக்கு கணவன் நம்பிக்கை துரோகம் செய்யலாகாது – மலா 2:15.
  • ஒரு மனைவி கொண்டவராயிருங்கள் - 1திமொ 3:2, தீத் 1:6.
4. வைப்பாட்டிகள் :
  • கிதியோனுக்கு, வைப்பாட்டிகள் இருந்தனர் - நீதி. 8:31.
  • தாவீதுக்கு, பல வைப்பாட்டிகள் இருந்தனர் - 2சாமு 5:13.
  • சாலமோனுக்கு 300 வைப்பாட்டிகள் இருந்தனர் - 1அர 11:3.
  • ரகபேயாம் 60 வைப்பாட்டிகளை கொண்டிருந்தார் - 2குறி 11:21.
5. விவாகரத்து :
  • தகாத வாழ்க்கையின் நிமித்தம் விவாகரத்து - இ.ச. 24:1.
  • அன்னிய பெண்களை விவாகரத்து செய்தனர் - எஸ்ரா 10:3.
  • மணவிலக்கு சான்றிதழ் கொடுத்து விவாகரத்து – மத் 5:31.
  • பொறுமையும், ஸ்னேகமும், தெய்வபயமும் குறைந்த இடங்களில், விவாகரத்து சாதாரணமாகப் பேசப்படுகிறது. இது, அலகையின் அரசுக்கு இயல்பானது. ஆனால், இறை அரசின் பங்காளிகளுக்கு, விவாகரத்து நடப்பது குறைவு.

I. குடும்ப மகிழ்ச்சிக்கு காரணங்கள் :
  • மனைவி மீது, கணவன் கொண்ட அன்பால் மகிழ்ச்சி – தொ.நூ 24:67. (ஈசாக்கு, ரபேக்கா)
  • சாராளுக்கு, குழந்தை பிறந்ததால் குடும்பத்தில் மகிழ்ச்சி – தொ.நூ 21:6.
  • பிள்ளைகள் வீட்டில் கூட இருக்கும் போது மகிழ்ச்சி – யோபு 29:5, தி.பா 127:4,5.
  • மனைவி, தாய் என்ற அந்தஸ்தை பெறும்போது மகிழ்ச்சி – நீ.மொ 31:28.
1. குடும்ப ஆத்மீகம் :
  • நானும் என் குடும்பமும் கர்த்தரையே செவிப்போம் - யோசுவா கூறினார் - யோசு 2:15.
  • யோபு, தன் பிள்ளைகளுக்காக, நாள்தோறும் எரிபலி ஒப்புக்கொடுத்தார் - யோபு 1:5.
  • குடும்பம் கூடி, கடவுளின் வல்ல செயலை பேச வேண்டும் - லூக் 8:39.
  • மரியா, இயேசுவின் காலடியில் அமர்ந்து, அவர் சொல்வதை கேட்டாள் - லூக் 10:39.
  • தாம் சந்தித்த ஆண்டவரைப் பற்றி, மற்றவர்க்கும் எடுத்துக் கூற வேண்டும் - யோவா 1:41.
  • லீதியாளும், அவள் வீட்டாரும் திருமுழுக்கு பெற்றனர் - தி.தூ 16:15.
  • சிறைக் காவலன், குடும்பமாக திருமுழுக்கு பெற்றான் - தி.தூ 16:33.
2. இறைப்பற்றுடைய தந்தையர் :
  • ஆபிரகாம் இறைப்பற்றுடையவர் என்று கடவுள் கண்டார் - தொ.நூ 18:19.
  • யாக்கோபு, தன் வீட்டாரை தூய்மைப்படுத்தினார் - தொ.நூ 35:2.
  • மனோவாகு, கடவுளின் ஆலோசனை கேட்டு வேண்டினார் - நீதிபதி 13:8.
  • தாவீது, இறுதி நாளில் சாலமோனுக்கு இறைவழி காட்டினார் - 1அர 2:1-4.
  • தந்தை சக்கரியா, தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார் - லூக் 1:67.
  • கொர்னேலியு, இறைப்பற்றுள்ளவர், ஜெபிப்பவர் - தி.தூ 10:2.
3. இறைப்பற்றுள்ள தாய்மார் :
  • சாராவை கடவுள் சிரிக்க வைத்ததாக கூறினாள் - தொ.நூ 21:6.
  • அன்னா, மகனை ஆண்டவருக்கு ஒப்புகொடுப்பதாக சொன்னாள் - 1சாமு 1:22.
  • எலிசபெத்து தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார் - லூக் 1:41..
  • மரியாள், தாழ்நிலையில் நின்றதால் உயர்வடைந்தார் - லூக் 1:46-55.
4. பெற்றோரின் ஜெபம் :
  • ஆபிரகாம், கடவுளின் இஸ்மாயிலுக்காக ஜெபித்தார் - தொ.நூ 17:18.
  • தாவீது, தன் மகனுக்காக நோன்பிருந்து வேண்டினார் - 2சாமு 12:16.
  • தாவீது, சாலமோனுக்காக ஜெபித்தார் - 1குறி 29:19.
  • பேய்பிடித்த மகனின் தந்தை, இயேசுவிடம் ஜெபித்தார் - மத் 17:15.
  • கனானேயப் பெண், தன் மகளுக்காக ஜெபித்தார் - மாற் 7:26.
Share:

Blog Archive

ஊக்கம் தருபவர்கள்